×

வத்தலக்குண்டுவில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வத்தலக்குண்டு, ஜூன் 24: வத்தலக்குண்டுவில் உள்ள பெரியகுளம் சாலையில் மஞ்சளாற்று பாலம் அருகே வசிப்பவர் அமாவாசை. இவரது மனைவி மாரியம்மாள் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. அது என்ன பாம்பு என்றே தெரியாமல் வீட்டிலிருந்தோர் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தனர. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப் மற்றும் வீரர்கள் வீட்டுக்குள் இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை அரை மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

The post வத்தலக்குண்டுவில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Vatthalakundu ,Amavasai ,Manjalaru Bridge ,Periyakulam road ,Mariammal ,
× RELATED வத்தலக்குண்டு ஜி.தும்மலப்பட்டியில்...